வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 15, 2019, 03:30 PM IST
வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் title=

நேற்று ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் ஆவார். இவர்களது உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவர்களின் உடல்கள் சொந்த கிராமத்திற்கு கொண்டுச்செல்லப்படும். 

இந்தநிலையில், இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தாக்குதலில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் இரங்கல் தெரிவித்தார். மேலும் வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Trending News