ரூ.62.83 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்

Last Updated : May 3, 2017, 03:25 PM IST
ரூ.62.83 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் title=

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை - காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை உருது பெண்கள் நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள்; திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நல மருத்துவமனை மற்றும் வெங்கடா சமாதி தெருவில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள்; தேனாம்பேட்டை மண்டலம்-மெக்காபுரம் பிரதான சாலையில் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; வளசரவாக்கம் மண்டலம்-காரம்பாக்கம் பொன்னி நகரில் 54 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் 150வது வார்டிற்கு கட்டப்ப ட்டுள்ள அலுவலகக் கட்டடம்; அடையாறு மண்டலம்-மடுவன்கரை ஐந்து பர்லாங் சாலையில் 1 கோடியே 58 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் 174வது வார்டிற்கு கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்; சோழிங்கநல்லூர் மண்டலம்-நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்; நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்; திண்டுக்கல் 

மாநகராட்சியில் 90 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டிலான உயிரி எரிவாயு கலன்;  கடலூர் நகராட்சியில்  50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றவர்களுக்கான இரவு தங்கும் விடுதி; பேரூராட்சிகள்  நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சியில்  50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துப்புரவு பணியாளர் குடியிருப்பு வளாகம்;  

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி;  வேலூர் மற்றும் சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடைகள்; நாமக்கல் மாவட்டம், மோகலூர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகள்; திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள பாலம்; திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை மற்றும் திருவேங்கடம் பேரூராட்சிகளில் 1 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், திரு வேங்கடம் பேரூராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்; என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 61 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவுற்ற 21 திட்டப்பணிகள்;

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதுக்கோட்டை நகரம் – காட்டுபுதுக்குளத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 1 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம்; என மொத்தம் 62 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 நிறைவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாண்புமிகு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் .கே. மணிவாசன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) முகமது நசிமுத்தின், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தீரஜ் குமார், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஆஷிஷ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Trending News