AGR நிலுவைத் தொகையாக DOT-க்கு கூடுதலாக ₹ 8004 கோடி செலுத்தியது Airtel...

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையாக தொலைத் தொடர்புத் துறைக்கு (DOT) கூடுதலாக ரூ.8,004 கோடி செலுத்தியுள்ளது பாரதி ஏர்டெல்.

Last Updated : Feb 29, 2020, 04:01 PM IST
AGR நிலுவைத் தொகையாக DOT-க்கு கூடுதலாக ₹ 8004 கோடி செலுத்தியது Airtel... title=

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையாக தொலைத் தொடர்புத் துறைக்கு (DOT) கூடுதலாக ரூ.8,004 கோடி செலுத்தியுள்ளது பாரதி ஏர்டெல்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க 2020 பிப்ரவரி 17 அன்று நிறுவனம் செலுத்திய ரூ.10,000 கோடிக்கு கூடுதலாக ரூ.8,004 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க, பிப்ரவரி 17, 2020 அன்று பாரதி ஏர்டெல் ரூ.10,000 கோடியை  DoT-க்கு செலுத்தியிருந்தது. தொலைத் தொடர்புத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தங்களது நிலுவைத் தொகையை உடனடியாகக் குறைக்க அல்லது "தேவையான நடவடிக்கைகளை" எதிர்கொள்ள உத்தரவுகளை வழங்கத் தொடங்கிய பின்னர் இந்த நடவடிக்கை முன்னேற்றம் கண்டது. ஆக., சமீபத்திய கட்டணத்துடன், நிறுவனம் மொத்தம் ரூ.18,004 கோடியை செலுத்தியுள்ளது.

DoT மதிப்பீடுகளின்படி, ஏர்டெல் உரிம கட்டணம், செலுத்தப்படாத தொகைக்கு வட்டியுடன் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம், அபராதம் மற்றும் அபராதம் மீதான வட்டி உள்ளிட்ட ஏறக்குறைய ரூ.35,586 கோடி (2019 ஜூலை வரை) என மதிப்பிடப்பட்டு இருந்தது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) தீர்ப்பின்படி, நிறுவனம் 2006-07 நிதியாண்டிலிருந்து 2019 டிசம்பர் 31 வரை சுய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது மற்றும் 2020 பிப்ரவரி 29 வரை வட்டி செலுத்தியுள்ளது என்று பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

"அதன்படி, பாரதி குழும நிறுவனங்களின் சார்பாக 2020 பிப்ரவரி 17 அன்று செலுத்தப்பட்ட ரூ.10,000 கோடிக்கு மேல் மற்றும் அதற்கு மேல் செலுத்த வேண்டிய முழு மற்றும் இறுதித் தொகைகளுக்கு கூடுதல் ரூ.3,004 கோடியை நிறுவனம் செலுத்தியது" என்று பாரதி ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

இந்த கட்டணத்தில் பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸாகாம் மற்றும் டெலினார் இந்தியா ஆகியவற்றின் பொறுப்புகள் அடங்கும்.

இதுகுறித்து ஏர்டெல் தெரிவிக்கையில் "நாங்கள் தற்காலிகமாக 5,000 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளோம் (அடுத்தடுத்த பணத்தைத் திரும்பப்பெறுதல் / வேறுபாடுகளை மறைப்பதற்கு சரிசெய்தல் ஆகியவற்றிற்கு உட்பட்டு, DoT-யுடனான நல்லிணக்கப் பயிற்சியிலிருந்து ஏதேனும் எழினால்)" என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில், வோடபோன் ஐடியா ரூ.53,000 கோடி மதிப்புள்ள நிலுவைத் தொகையை கொண்டுள்ளது, இதில் ரூ.24,729 கோடி வரை ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையும், மேலும் ரூ.28,309 கோடி உரிமக் கட்டணமும் அடங்கும். டாடா டெலிசர்வீசஸ் சுமார் 13,800 கோடி ரூபாயும், BSNL ரூ.4,989 கோடியும், MTNL ரூ.3122 கோடியும் கடன்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா இதுவரை AGR நிலுவைத் தொகையின் ஒரு பகுதியாக ரூ.3,500 கோடியை தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News