சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஹெர்மெய்ன் எனும் பகுதியில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடந்தார்.
லெப்டினன்ட் பதவியில் இருந்த அந்த அதிகாரி குல்காம் பகுதியைச் சேர்ந்தவர். சோபியானில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு அவர் மர்ம முறையில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் போலீஸார் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனே அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர். அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த சண்டையில் சத்ரிபோரா சோபியான் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.