மூன்று நாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் ஆகும். மேலும் இதனுடன் இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.
இந்தியா - இஸ்ரேல் இடையே நட்புறவு மேற்கொள்ளும் விதமாக 70 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து இன்று காலை, சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த ஏவுகணை இலக்கை நோக்கி தாக்கியதா என்று தென்கொரியா குறிப்பிடவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். முதலில் வியட்நாம் செல்லுகிறார், அந்த நாட்டுடன் ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.