ஜம்மு காஷ்மீரின் உள்ள உரி ராணுவ முகாமிற்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், உரி தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசிப்பதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கிய அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு டில்லி அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் பாரிக்கர் மற்றும் ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் பல பகுதிகளில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.