பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் புயலை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன் போது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் புயலை வெற்றிகரமாக எதிர்க்கொள்ளாலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Trending News