புளோரிடாவில் துப்பாக்கி சூடு: மூன்று பேர் பலி, பலர் காயம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா ஸ்டூடியோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகிவிட்டனர்.

Last Updated : Nov 3, 2018, 09:24 AM IST
புளோரிடாவில் துப்பாக்கி சூடு: மூன்று பேர் பலி, பலர் காயம்! title=

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா ஸ்டூடியோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகிவிட்டனர்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் யோகா ஸ்டூடியோ ஒன்று உள்ளது. நேற்று மாலை அந்த ஸ்டூடியோவில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இந்த தாக்குதலில் மூன்று பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். முதல் கட்டமாக அந்த மர்ம நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. 

தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending News