மைத்ரிபால சிறிசேனா உத்தரவு செல்லாது: இலங்கை உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 07:40 PM IST
மைத்ரிபால சிறிசேனா உத்தரவு செல்லாது: இலங்கை உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு title=

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கை நீக்கியவிட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா. 

அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை. தான் பிரதமராக நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். பின்னர் இலங்கை நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பிற்க்காக கூட்டப்பட்ட பேரவை கலகத்தில் முடிய ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால், இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நீடித்தது. இதைதொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மஹிந்த ராஜபக்சே பிரதமாராக செயல்பட தடை விதித்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அவருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க அதிகாரம் இல்லை என்றும் ஏழு நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர்.

Trending News