நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்! இது வரை 50 பேர் பலி!

வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2022, 01:49 PM IST
  • நியூயார்க்கில் உள்ள பஃபலோ பகுதியில் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
  • கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பஃபலோ நகர பகுதியில் ஒரு குடும்பம் பனியில் புதைந்தது.
  • நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்!  இது வரை 50 பேர் பலி! title=

நியூயார்க்: இந்தியாவில் மக்கள் 5 டிகிரி வெப்பநிலையை தாங்க முடியாமல் நடுங்கும் நிலையில், -50 டிகிரி வெப்பநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த நேரத்தில் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மின்சாரம் இல்லாததால், ஹீட்டர் மற்றும் பிற சாதனங்களும் இயங்கவில்லை. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  நியூயார்க்கில் உள்ள பஃபலோ பகுதியில் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நியூயார்க்கில் திங்கள்கிழமை வரை மோசமான வானிலை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்பொழிவு மற்றும் குளிரால் நாடு முழுவதும் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  அனைத்து பகுதியும் பனியினால் மூடப்பட்டுள்ளது. அனைத்தும் தூய வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பஃபலோ நகர பகுதியில் ஒரு குடும்பம் பனியில் புதைந்தது. இந்த குடும்பத்தில் இரண்டு மற்றும் ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகளும் இருந்தனர். காரில் பயணித்த அவர்கள், பனிப்புயலில் சிக்கிக் கொண்டனர். 11 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னரே அவர்களை மீட்க முடியும். CBS செய்திகளுடன் பேசுகையில், குடும்பத் தலைவர் ஜில்லா சாண்டியாகோ, தாங்க உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் விட்டுவிட்டதாகக் கூறினார். காரின் இன்ஜினை இயக்கி விட்டு, குளிரில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். 

சில பகுதிகளில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கவர்னர் ஹோச்சுலின், ஜனாதிபதி ஜோ பிடனிடம் இதை ஒரு பேரழிவாக அறிவித்து நியூயார்க்கிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இதே வானிலை நீடிக்க வாய்ப்புள்ளது. மிகவும் அவசியமான நேரங்களில் மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறுபுறம், பஃபெலோ பகுதியில் உள்ள திருடர்களும் கொள்ளையர்களும் மோசமான வானிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்குள்ள சில கடைகளில் சூறையாடுதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். வால்மார்ட் போன்ற கடைகளில் கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பஃபேலோவில் உள்ள பீல் அவேயின் 260 பிளாக்கில் உள்ள ஒரு கடையில் திருட்டைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. 

மேலும் படிக்க | கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

வட அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் வார இறுதியில் இரண்டரை மில்லியன் வீடுகள் இருளில் மூழ்கியது மற்றும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஆனால், சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது. வெர்மான்ட், ஓஹியோ, மிசோரி, விஸ்கான்சின், கன்சாஸ் மற்றும் கொலராடோ ஆகிய இடங்களில் வானிலையால் பலர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு புளோரிடாவில், வெப்பநிலை மிக வேகமாகக் குறைந்து சில விலங்குகள் கூட உறைந்து இறக்கின்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள மொன்டானாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு வெப்பநிலை -50 டிகிரியை எட்டியது.

இந்தியாவிலும் குளிர்  மற்றும் அடர்ந்த மூடுபனி அதிக அளவில் உள்ளது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியை எட்டியுள்ளது. குளிரின் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே சிறைவைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதவிர, குளிரை தவிர்க்க மக்கள் தீ மூட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | பாம் புயலால் அலறும் அமெரிக்கா - 18 பேர் பலி... 7 லட்சம் பேர் தவிப்பு!

 

Trending News