சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வார்னர்

ஹைதராபாத் சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் டேவிட் வார்னர்.

Last Updated : Mar 28, 2018, 02:56 PM IST
சன்ரைஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வார்னர் title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் கேமரான் பேங்கிராப்ட் பந்தைச் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செய்த போது கேமரான் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. 

ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு போட்டியில் விளையாட தடை!

இதைக்குறித்து விசாரித்த போது, கேமரான் பேங்கிராப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார். இது தங்களுக்கு தெரிந்து தான் நடந்தது. அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலியா கேப்டன்  ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும், கேமரான் பேங்கிராப்ட்போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்தது ஐசிசி.
 
இதனால் ஐ.பி.எல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அஜிங்கே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக அஜிங்கே ரஹானே நியமிப்பு!! ஸ்டீவன் ஸ்மித் நீக்கம்!!

ஏற்கனவே, இச்சம்பவம் குறித்து வி.வி.எஸ். லட்சுமன் கூறுகையில், "கேப்டவுன் டெஸ்டில் நடந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு பிறகு தான் சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னரை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். 

இன்று, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்மித், வார்னர்-க்கு கிரிக்கெட் விளையாட 1 ஆண்டு தடை!

இந்நிலையில், இன்று ஹைதராபாத் சன்ரைஸ் அணியும் தனது அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை நீக்கியுள்ளது. இதனை ஹைதரபாத் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஹைதரபாத் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Trending News