Minimum Balance இல்லையென்றால் வங்கிகள் அபராதம் விதிக்க முடியுமா? RBI விதிகள் கூறுவது என்ன?

RBI Rules on Minimum Balance:  குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது சரியா? இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2024, 05:24 PM IST
  • ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உத்தரவுகள் என்ன?
  • வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
  • கணக்கு அடிப்படை கணக்காக மாற்றப்பட வேண்டும்.
Minimum Balance இல்லையென்றால் வங்கிகள் அபராதம் விதிக்க முடியுமா? RBI விதிகள் கூறுவது என்ன? title=

RBI Rules on Minimum Balance: உங்களிடம் வங்கிக் கணக்கு இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 2024 நிதியாண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களிடமிருந்து நாட்டின் 11 பொதுத்துறை வங்கிகள் ரூ.2331 கோடி சம்பாதித்துள்ளதாக சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் வங்கிகள் இந்த வகையில் மொத்தம் 1855.43 கோடி ரூபாய் ஈட்டியுள்ளன. அதாவது, ஒரு ஆண்டில் இந்த வங்கிகளின் வருவாய் சுமார் 25.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இந்த 11 வங்கிகளும் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Balance) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து இதுவரை மொத்தம் ரூ.5614 கோடியை ஈட்டியுள்ளன. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது சரியா? இது தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி

இரண்டு மாதங்களுக்கு முன்பு, யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ரூ.91 லட்சம் அபராதம் விதித்தது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காமல் இருந்த வாடிக்கையாளர்களிடம் யெஸ் வங்கி தவறாகக் கட்டணம் வசூலித்து இந்தப் பணத்தை ஈட்டியதால் ரிசர்வ் வங்கி இதைச் செய்தது. கணக்கில் இருப்பு குறைந்தபட்ச வரம்பை விட குறைவாக இருந்தால், பல வங்கிகள் சில அபராதம் விதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டணம் வெவ்வேறு வங்கிகளுக்கு ரூ.400-500 வரை மாறுபடுகிறது. ஆனால் இதுபோன்ற கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர் அனைத்துப் பணத்தையும் எடுத்து, வங்கி அபராதம் விதித்தால், வாடிக்கையாளரின் இருப்பு நெகடிவ் (Negative Balance) ஆகிவிடும் அல்லவா? அப்படியானால் ஒருவரின் கணக்கு இருப்பும் (Account Balance) எதிர்மறையாக செல்ல முடியுமா? இந்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உத்தரவுகள் என்ன? 

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதிக்கப்படுவதால், எந்த ஒரு கணக்கிலும் இருப்புத் தொகை நெகடிவில் செல்லாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம் என இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான அறிவுறுத்தல்களில் குறிப்பிட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் இருப்புத் தொகை எதிர்மறையாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இருப்பினும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வாடிக்கையாளர் அபராதம் செலுத்த வேண்டியதில்லை என்று அர்த்தமில்லை. இப்போது மீண்டும் அதே கேள்வி எழுகிறது. அபராதம் விதிக்கப்பட்டால் குறைந்தபட்ச இருப்பு எதிர்மறையாக மாறும்.

மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்

வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி 2014 நவம்பர் 20 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதன்படி அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் பிரச்சனைகள் மற்றும் கவனக்குறைவு காரணமாக அவரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்குக் கீழே கணக்கு இருப்பு போனால் வங்கிகள் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும். மேலும், வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும், இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

கணக்கு அடிப்படை கணக்காக மாற்றப்பட வேண்டும்

அத்தகைய கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக, வங்கிகள் அதில் வழங்கப்படும் வசதிகளை மட்டுப்படுத்த வேண்டும் என ஆர்பிஐ -இன் (RBI) சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் அத்தகைய கணக்குகளை அடிப்படை கணக்குகளாக மாற்ற வேண்டும். அதே நேரத்தில், வாடிக்கையாளரின் கணக்கில் இருப்பு மீண்டும் குறைந்தபட்ச இருப்பை விட அதிகமானவுடன், அது வழக்கமான கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும். 

குறைந்தபட்ச இருப்புத்தொகை

ஒரு நபர் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கைத் (Savings Account) தொடங்கினால் சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு வரம்பை வைத்திருக்கின்றன. அதாவது, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் அந்த அளவு தொகையை தங்கள் கணக்கில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் .வாடிக்கையாளரின் குறைந்தபட்ச இருப்பு தொகை இதை விட குறைவாக இருந்தால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருப்பினும், இருப்பு பூஜ்ஜியமாக இருந்தால், ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது. ஏனெனில் இது கணக்கை நெகடிவ்வாக மாற்றும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News