கொரோனா சிக்கிசைக்கான மருந்தின் விலையை நிர்ணயித்தது சிப்லா..!

சிப்லா நிறுவனம் COVID-19 சிகிச்சைக்கான மருந்தின் விலையை ₹.5,000 ரூபாய்கும் குறைவாக நிர்ணயம் செய்வதாக தெரிவித்துள்ளது..! 

Last Updated : Jun 24, 2020, 03:40 PM IST
கொரோனா சிக்கிசைக்கான மருந்தின் விலையை நிர்ணயித்தது சிப்லா..! title=

சிப்லா நிறுவனம் COVID-19 சிகிச்சைக்கான மருந்தின் விலையை ₹.5,000 ரூபாய்கும் குறைவாக நிர்ணயம் செய்வதாக தெரிவித்துள்ளது..! 

கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுக்க மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு ஒரு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கமாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். மறுபுறம், கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க பல்வேறு மருந்து நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பணிபுரிந்து வருகிறது. 

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா செவ்வாயன்று கோவிட் -19 நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக கிலியட் சயின்சஸ் இன்க் இன் ஆன்டிவைரல் மருந்து ரெமெடிசிவரின் பொதுவான பதிப்பான 'சிப்ரேமி'க்கு 100 mg மருந்து குப்பியின் விலையை ₹.5,000 ரூபாய்கும் குறைவாக நிர்ணயம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிப்லா மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்திய மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ லேப்ஸ் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் ரெம்டெசிவிரின் பொதுவான பதிப்புகளை விற்க ஒப்புதல் பெற்றன. இதேபோன்ற 100 மில்லிகிராம் அளவை 5,000 முதல் 6,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்ய ஹெட்டெரோ எதிர்பார்க்கிறது. 

பங்களாதேஷின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளர்களில் ஒருவரான பெக்ஸிம்கோ பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மே மாதத்தில் ரெமெடிசீவரின் பொதுவான மாறுபாட்டை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நிறுவனமாக ஆனது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் அதன் பதிப்பை ஒரு குப்பியில் 5,000 முதல் 6,000 தக்காக்கள் ($ 59 முதல் $ 71) வரை விலை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

READ | COVID-19-னை குணப்படுத்தும் என கூறப்பட்ட கொரோனில் மாத்திரை தடை செய்யப்படலாம்...

ரெம்தேசிவிர் (Remdesivir) என்ற மாத்திரையை சிப்லா நிறுவனம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா அறிகுறிகள் கடுமையாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இம்மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்தை அவசர தேவைக்காக பயன்படுத்த இந்திய அரசு இம்மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.  

இதைத்தொடர்ந்து, நேற்று கிலென்மார்க் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 40% உயர்வை எட்டி சாதனை படைத்தது. மேலும், சிப்லா நிறுவனத்தின் பங்குகள் 9.5% உயர்ந்துள்ளன. இந்நிலையில், கிலென்மார்க், சிப்லா பங்குகளால் குறுகிய கால பயன் மட்டுமே கிடைக்குமே தவிர நீண்ட கால அடிப்படையில் லாபத்திற்கான வாய்ப்புகள் குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர். ரெம்தேசிவிர் மருந்து உற்பத்தியில் சிப்லா மட்டுமெல்லாமல் ஹெட்டிரோ, கேடிலா, ஜூபிலண்ட் லைஃப் சைன்சஸ், ஸ்ட்ரைட்ஸ் ஃபார்மா உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், கிலென்மார்க்கின் ஃபவிபிரவிர் மருந்து உற்பத்தியிலும் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் களமிறங்கக்கூடும். ஒரே சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கும்போது பங்குகளின் மதிப்பு சரிந்துவிடும்.

இதுமட்டுமல்லாமல், கொரோனாவிலிருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்தால், பங்குகள் மேலும் சரிந்துவிடும். இதுபோக, புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டும் போது அவற்றின் போட்டியையும் சமாளிக்க வேண்டும். அடுத்த 15-30 நாட்களில் கொரோனா மருந்து சந்தையில் குறைந்தது 3 அல்லது 4 நிறுவனங்கள் புதிதாக போட்டியிடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் அளித்ததால் கிலென்மார்க், சிப்லா மருந்துகளின் விற்பனை கணிசமாக உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் விற்பனை நிலையாக இருக்காது என இன்வெஸ்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News