E-auction: பிரதமருக்கு கிடைத்த பரிசுபொருட்கள் ஏலத்தில் 10 கோடி ரூபாய் பெற்ற ஈட்டி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பிரதமருக்கு பரிசாக வழங்கிய ஈட்டி 10 கோடிக்கு ஏலம் போனது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2021, 05:56 PM IST
  • பிரதமருக்கு கிடைத்த பரிசுபொருட்கள் ஏலம் விடப்பட்டன
  • நீரஜ் சோப்ராவின் ஈட்டி 10 கோடி ரூபாய்க்க்கு ஏலம் போனது
  • ஏலத்தில் கிடைக்கும் பணம் நமாமி கங்கே திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்
E-auction: பிரதமருக்கு கிடைத்த பரிசுபொருட்கள் ஏலத்தில் 10 கோடி ரூபாய் பெற்ற ஈட்டி title=

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பிரதமருக்கு பரிசாக வழங்கிய ஈட்டி 10 கோடிக்கு ஏலம் போனது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அப்போது, ஒலிம்பிக் வீரர்கள் பிரதமருக்கு தங்கள் விளையாட்டுக் கருவிகளை பரிசாக வழங்கினார்கள்.  

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பிரதமருக்கு தனது ஈட்டியை பரிசாக வழங்கினார். அதேபோல், ஒவ்வொருவரும் தாங்கள் பயன்படுத்திய வெவ்வேறு பொருட்களை பிரதமருக்கு பரிசளித்தனர். அந்த பொருட்கள் அனைத்தும் மின் ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் இருந்து கிடைக்கும் பணம், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்காக வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள், நினைவுப் பொருட்களை ஏலம் விட்டதில் ஒவ்வொரு பொருளும் கணிசமான விலைக்கு ஏலம் கோரப்பட்டன.

pm

இந்த ஏல நடைமுறை தொடங்குவதற்கு முன்னதாக, மக்கள் அனைவரும் பெருமளவில் இந்த ஏலத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள் ஆகியவற்றை மின்னணு ஏலத்தில் விடும் பணியை கலாச்சாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டது.

இந்த ஏலத்தில் டோக்கியா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பிரதமருக்கு வழங்கிய நினைவுப் பரிசுகளும் இடம் பெற்றிருந்தன. முதல் நாளிலேயே ரூ.10 கோடிக்குமேல் பொருட்கள் ஏலம் கேட்கப் பட்டிருந்தன.

நீரஜ்சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1.55 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது. இறுதியில் அது 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றபோது பயன்படுத்திய கையுறையின் விலை 80 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை அதிகபட்சமாக ரூ.1.92கோடிக்கு 11 பேர் ஏலம் கேட்டிருந்தனர்..

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித் அன்டில் பயன்படுத்திய ஈட்டி ரூ.1.8 கோடிக்கும், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பயன்படுத்திய ஹாக்கி மட்டை ரூ.1.1 கோடிக்கும் ஏலம் கேட்கப்பட்டது. இந்த மின்னணு ஏலம் மூலம் கிடைக்கும் பணம், கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் ‘நமாமி கங்கை’ திட்டத்துக்கு வழங்கப்படுகிறது.  

lavlina

பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள் உட்பட அனைத்துப் பொருட்களும் ஏலத்தில் விடப்ப்டுகின்றன.  இந்த வருவாய் கங்கை நதியை தூய்மைபடுத்தும் மற்றும் பாதுகாக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. 

தற்போது பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஏலம் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டாக பிரதமர் பெற்ற பரிசுப் பொருட்கள் அனைத்தும் இந்த ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டு பிரதமர் ஆனதில் இருந்து, பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் 2 முறை ஏலம் நடத்தப்பட்டு இருக்கிறது. இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை ஏலங்கள் நடைபெற்றன.

 Also Read | In Pics: பிரதமர் மோடி டோக்யோ ஒலிம்பிக்ஸ் நட்சத்திரங்களுக்கு அளித்த காலை விருந்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News