Bank Alert: உங்கள் வங்கியில் புதிய IFSC குறியீட்டை பெறவும்.. இல்லையெனில் பரிவர்த்தனை செய்ய இயலாது!

பிப்ரவரி 28-க்குள் புதிய IFSC குறியீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2021, 06:56 AM IST
Bank Alert: உங்கள் வங்கியில் புதிய IFSC குறியீட்டை பெறவும்.. இல்லையெனில் பரிவர்த்தனை செய்ய இயலாது! title=

பிப்ரவரி 28-க்குள் புதிய IFSC குறியீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது..!

மத்திய அரசு தேனா வங்கி (Dena Bank) மற்றும் (Vijaya Bank) விஜயா வங்கியை சில காலத்திற்கு முன்பு பாங்க் ஆப் பரோடாவில் (Bank Of Baroda) இணைத்தது, அதன் பிறகு இந்த இரண்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பாங்க் ஆப் பரோடாவின் (BOB) வாடிக்கையாளர்களாக மாறினர். இப்போது பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் E-விஜயா மற்றும் E-தேனா IFSC குறியீடுகள் 2021 மார்ச் 1 முதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. அத்தகைய சந்தர்ப்பத்தில், விஜயா மற்றும் தேனா வங்கியின் கிளைகளிலிருந்து புதிய IFSC குறியீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

புதிய IFSC எண்ணை வீட்டில் உட்கார்ந்தபடி மாற்றலாம் 

நீங்கள் 1800 258 1700 கட்டணமில்லா எண்ணுக்கு (Toll-free number) அழைக்கலாம் அல்லது வங்கி கிளையையும் பார்வையிடலாம். இது தவிர, நீங்கள் செய்தி அனுப்புவதன் மூலமும் ஒரு புதிய எண்ணை பெறலாம். இதற்காக, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 8422009988-க்கு "பழைய கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள்" என்று எழுதி SMS அனுப்ப வேண்டும்.

ALSO READ | SBI YONO பயனரா நீங்கள்?, இதை Update செய்யாவிட்டால் உங்கள் கணக்கும் முடங்கும்..!

IFSC குறியீடு என்றால் என்ன?

இது 11 இலக்கங்களின் குறியீடு. இந்த குறியீட்டின் ஆரம்ப நான்கு எழுத்துக்கள் வங்கியின் பெயரைக் குறிக்கின்றன. ஆன்லைன் கட்டணத்தின் போது IFSC குறியீடு பயன்படுத்தப்படுகிறது. வங்கியின் எந்த கிளையையும் அந்த குறியீடு மூலம் கண்காணிக்க முடியும். நீங்கள் அதை வங்கி கணக்கு மற்றும் காசோலை புத்தகம் மூலம் காணலாம். ஒரு வங்கி கிளையின் ஒவ்வொரு கணக்கிலும் ஒரே IFSC குறியீடு உள்ளது. 

வங்கி இணைப்பு 2020 ஏப்ரல் 1 அன்று நடந்தது

ஏப்ரல் 1, 2020 அன்று, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியை பாங்க் ஆப் பரோடாவில் அரசாங்கம் இணைத்தது. அவர்கள் இணைந்த பின்னர், பாங்க் ஆப் பரோடா உலகின் மூன்றாவது பெரிய வங்கியாக மாறியுள்ளது.

பஞ்சாப் வங்கி மார்ச் 31 வரை நேரம் தருகிறது

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களை பழைய FSC மற்றும் MICR குறியீடுகளை ஏப்ரல் 1-க்கு முன்பு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வங்கியின் கூற்றுப்படி, இந்த குறியீடுகள் 31 மார்ச் 2021-க்குப் பிறகு இயங்காது. நீங்கள் பணத்தை மாற்ற விரும்பினால், நீங்கள் வங்கியில் இருந்து ஒரு புதிய குறியீட்டைப் பெற வேண்டும். மேலும் தகவலுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா எண் 18001802222/18001032222 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News