இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.75,000 ஓய்வூதியம் கிடைக்கும்!

தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ. 75,000 ஓய்வூதியமாக பெற முடியும்.   

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 06:24 AM IST
  • என்பிஎஸ் திட்டம் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
  • என்பிஎஸ் திட்டத்தின் முதலீட்டாளர் ஒரு தொகையை எடுத்து கொள்ளலாம்.
  • இந்த தொகையின் மூலம் 60 வயதுக்கு பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.75,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.75,000 ஓய்வூதியம் கிடைக்கும்! title=

ஒருவரது ஓய்வுக்குப் பிறகு அவர்களது நிதி சம்மந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பலரும் பலவிதமான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.  குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் பெரிய தொகையை ஓய்வூதியமாக தரும் திட்டங்களில் என்பிஎஸ் திட்டம் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.  தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் இந்த என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ. 75,000 ஓய்வூதியமாக பெற முடியும்.  அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை தவணை தவறாமல் செலுத்தி வந்தால் ஓய்வுக்கு பிறகு ஒரு பெரிய தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாக பெறமுடியும்.  

என்பிஎஸ் திட்டத்தின் முதிர்ச்சி காலத்தில் முதலீட்டாளர் ஒரு தொகையை எடுத்து கொள்ளலாம், அவ்வாறு எடுத்த தொகை போக மீதமிருக்கும் பணத்துடன் அவர்கள் ஓய்வூதியம் பெற ஆன்யூட்டி திட்டத்தை பெறலாம். ஓய்வுக்கு பிறகு சிறந்த வருமானம் தரும் முதலீடாக இந்த என்பிஎஸ் திட்டம் கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஆக்டிவ் சாய்ஸின்படி பணத்தை பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம், 75% ஆக்டிவ் சாய்ஸில் முதலீடு செய்யலாம்.  மாதத்திற்கு ரூ.75,000 முதலீடு செயும்போது இந்த திட்டத்தின் முதிர்வில் மொத்த தொகை ரூ.3.83 கோடியாக இருக்கும், இந்த தொகையின் மூலம் 60 வயதுக்கு பிறகு, ஒவ்வொரு மாதமும் ரூ.75,000 ஓய்வூதியம் கிடைக்கும்.  

மேலும் படிக்க | Jackpot! இந்த அரிய ‘ரூபாய் நோட்டுகள்’ இருந்தால் ₹2 லட்சம் அள்ளலாம்!

என்பிஎஸ் திட்டத்தில் 25 வயதுடைய ஒருவர் 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்கிறார்.  அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% வருமானத்துடன், 60 வயதில் ரூ.3,82,82,768 கிடைக்கும்.  இதில் 40% ஆன்யூட்டி திட்டத்தை வாங்க பயன்படுத்தலாம்.  இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.76,566 கிடைக்கும் மற்றும் 30 வயது ஆனவர்கள் ஒவ்வொரு மாதமும் என்பிஎஸ் திட்டத்தில் ரூ.16,500 முதலீடு செய்தால் அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு எளிதாக ரூ.75,218 ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சேமிப்பு கணக்கை NRE கணக்காக மாற்ற முடியுமா? NRI, NRE, NRO-வித்தியாசம் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News