2016 ஆம் ஆண்டைவிட 2017-லில் மலேரியா பாதிப்பு 24% குறைவு: WHO

இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டைவிட 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2018, 04:12 PM IST
2016 ஆம் ஆண்டைவிட 2017-லில் மலேரியா பாதிப்பு 24%  குறைவு: WHO title=

இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டைவிட 24% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது! 

உலக சுகாதார அமைப்பு இன்று உலக மலேரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு மலேரியாவின் தாக்கம் இந்தியாவில் சுமார் 24% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசாவில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் அறிக்கையிடப்பட்ட அனைத்து மலேரியா தொடர்பான வழக்குகளிலும் 'மிக மோசமான' மாநிலமானது 40% ஆகும்.  

இது குறித்து, உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ஆம் ஆண்டு உலகில் மலேரியாவால் 21 கோடியே எழுபது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 இல் இந்தியாவில் மட்டும் 87 இலட்சம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இது முந்தைய ஆண்டைவிட 24 விழுக்காடு குறைவாகும். உலக அளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டோரில் இந்தியா 4விழுக்காட்டைக் கொண்டுள்ளது.

உலக அளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் எழுபது விழுக்காட்டை இந்தியா மற்றும் சகாராவை ஒட்டிய 10 ஆப்பிரிக்க நாடுகள் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 35 இலட்சம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் 571 மாவட்டங்களில் மலேரியா ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் மலேரியா பாதிப்பு குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. 

மலேரியாவாழ் பாதிப்படைந்த புர்கினா பாசோ, காமரூன், காங்கோ ஜனநாயக குடியரசு, காங்கோ, கானா, மாலி, மொசாம்பிக், நைஜர், நைஜீரியா, உகாண்டா, தான்சானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் WHO சிறப்பு பிரச்சாரங்களை நடத்தும் என்று அறிக்கை தெரிவித்தது.  

 

Trending News