Health tips: ஆரோக்கியமா? அழகா? இரண்டையும் கொடுக்கும் எளிய உணவு...

ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிற்கும் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகள் எவை தெரியுமா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2022, 01:37 PM IST
  • ஊட்டச்சத்துக்களின் பெட்டகம்
  • முளைகட்டிய தானியங்கள்
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பயறுகள்
Health tips: ஆரோக்கியமா? அழகா? இரண்டையும் கொடுக்கும் எளிய உணவு...  title=

நமது தினசரி உணவில் முளைகட்டிய தானியங்களை சேர்ப்பதன் மூலம் உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்தைப் பெறலாம். ஒவ்வொரு மூலத்திலும் ஊட்டச்சத்தை ஒளித்து வைத்திருக்கும் முளைக் கட்டிய உணவுகள்...

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும், முடி வளர்ச்சியை மேம்படுத்தும் முளை கட்டிய தானியங்கள். பயறு மற்றும் விதைகள் என இயற்கையான ஊட்டச்சத்து உணவுகள் இருக்கும்போது அவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருக்கலாம்.

முளை கட்டிய பயறுகளில் இயற்கையான வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. இவற்றை அதிநவீன ஆய்வகங்களும் உருவாக்க முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஆரோக்கியத்தின் அடிப்படை மூலங்கள் முளைகட்டிய பயறுகளில் பொதிந்துள்ளன.

ALSO READ | ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்தின் நன்மைகளும், தேவையும்

அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், இயற்கை சர்க்கரைகள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளின் சிறந்த சமநிலையைக் கொண்டுள்ள முளை கட்டிய தானியங்கள், ஊட்டச்சத்தை சுலபமாக கொடுக்கிறது.  

முளைகளின் பல நன்மைகள்
முளைகள் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிற்கும் பெரும் நன்மைகளைத் தருகின்றன. நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி, உடலை சுத்தப்படுத்துகின்றன. 

வீட்டிலேயே சுலபமாக முளைக் கட்டலாம் 
ஆரோக்கிய உணவு அல்லது மளிகைக் கடைகளில் முளைத்த பயறுகள் கிடைக்கும். ஆனால் அவற்றை வீட்டிலேயே சுலபமாக முளைக்கட்டலாம். கோதுமை, கொண்டைக் கடலை, பாசிப் பயறு, சோயா பீன்ஸ், பார்லி, தினை, விதைகள்,வெந்தயம் ஆகியவற்றை முளைக்கட்டலாம். 

ALSO READ | சுவையானதெல்லாம் ஆரோக்கியமானதா? இனிக்கும் சர்க்கரையின் கசப்பான மறுபக்கம்

ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை அல்லது ஏதேனும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளவும்.  
அவற்றை சுத்தம் செய்து நன்கு கழுவவும்.
முளைக்கும் நேரம் தானியத்திற்கு தானியம் வேறுபடும். 
24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு அவற்றை நன்கு கழுவி, ஈரமான துணியில் கட்டி வைக்கவும். மூட்டையாக கட்டிய தானியத்தை தண்ணீர் வடியும் வகையில் தொங்க விடவும்.
அவ்வப்போது அந்த துணியை ஈரப்படுத்தவும்.
24 மணி நேரத்தில் முளை கட்டிவிடும். 
ஒரு அங்குல நீளம் வரை முளை கட்டினால் நல்லது. 
பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுமார் அரை மணி நேரம் வெயிலில் வைக்கவும்.  நேரடியாக சூரிய ஒளியில் வைக்க வேண்டாம்.

ALSO READ | பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு! இது ஊட்டச்சத்து மந்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News