சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!!

உங்கள் நோய்களை குணப்படுத்தி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும் பவர் முருங்கை கீரைக்கு உள்ளது.

Last Updated : Dec 30, 2017, 06:59 PM IST
சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான மருந்து முருங்கை கீரை!! title=

பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கை கீரையை தினமும் ஒருபிடியாவது உணவில் சேர்த்துக்கொள்ள பல நோய்கள் தீரும் வலி நிவாரணியாக விளங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் உடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து  இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரையை மேல்பற்றாக போடும்போது வலி நிவாரணியாகிறது. பாலோடு சேர்த்து கொடுக்கும்போது எலும்புகளுக்கு பலம் தருகிறது. உப்போடு சேர்த்து சாறாக கொடுக்கும்போது நெஞ்சக சளியை வெளியேற்றுகிறது. 

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் போதும் எந்த நோயும் அண்டாது.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும் போகம் நீடிக்கும்.

நாவில் உண்டாகும் புண்கள், வாய் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சித்தரத்தை மருந்தாகி பயன்தருகிறது. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு எடுத்து நசுக்கி நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் சரியாகும். வாய் துர்நாற்றம் இல்லாமல் போகும். 

இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை  அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் மற்றும் உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தி மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைப்பதுடன் இரத்தச் சோகை வராமல் பாதுகாக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். 
 
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை  அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில்  மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரையாகும்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி நீங்கும் முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். 

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது சிறந்த ஊட்டம் தரும்

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு  பல மடங்கு அதிகரிக்கும். குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். 

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

Trending News