தெலுங்கான துப்பாக்கிச் சூட்டில் 10 மாவோயிஸ்ட்டுகள் பலி!

தெலுங்கானா மாநிலம் பிஜப்பூரில் மாவோயிஸ்ட்டுக்கள் 10 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்!

Last Updated : Mar 2, 2018, 02:16 PM IST
தெலுங்கான துப்பாக்கிச் சூட்டில் 10 மாவோயிஸ்ட்டுகள் பலி! title=

ஐதராபாத்/ ராய்பூர்: தெலுங்கானா மாநிலம் பிஜப்பூரில் மாவோயிஸ்ட்டுக்கள் 10 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்!

தெலுங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லை பகுதியில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தின் புஜாரி கங்கர்-ல் மாவோயிஸ்ட்கள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 10 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்கள் தெலுங்கானா மாநிலம் கோதகுதேம் மாவட்டத்தில் பதுராச்சாலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!

Trending News