உ.பி.யில் கனமழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்து 15 பேர் பலி...

உ.பி.யில் பெய்த கனமழையால் 15 பேர் பரிதாப பலி, 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன!!

Last Updated : Jul 13, 2019, 09:10 AM IST
உ.பி.யில் கனமழையால் 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்து 15 பேர் பலி... title=

உ.பி.யில் பெய்த கனமழையால் 15 பேர் பரிதாப பலி, 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன!!

கடந்த மூன்று நாட்களாக உத்தரபிரதேசத்தின் 14 மாவட்டங்களில் இடியுடன் பெய்த பலத்த மழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கடந்த நான்கு நாட்களில், அதாவது ஜூலை 9 முதல் 12 வரை மழை தொடர்பான சம்பவங்கள் காரணமாக பதினைந்து பேர் இறந்தனர், 23 விலங்குகள் கொல்லப்பட்டன, 133 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாகராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபிட், சோனாபத்ரா, சந்தோலி, ஃபிரோசாபாத், மவு மற்றும் சுல்தான்பூர் ஆகியவை அடங்கும். லக்னோவில் சனிக்கிழமை மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கு "ஓரிரு இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மேகமூட்டமான வானம் காணப்படும்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

IMD-யின் கருத்துப்படி, உத்தரகண்ட், கிழக்கு உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் கோவா, கடலோர கர்நாடகா, அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் சனிக்கிழமை அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News