உபி உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 23 பலி

Last Updated : Aug 20, 2017, 08:49 AM IST
உபி உத்கல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 23 பலி title=

உத்தரப்பிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்த்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போதும் மீட்புக் குழுவினரும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 72 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

Trending News