மர்ம முறையில் ஹோட்டல் அறையில் கிடந்த பெண்ணின் சடலம்...

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 26 வயது பெண்ணின் உடல் இறந்தநிலையில் கண்டெடுப்பு...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2018, 12:04 PM IST
மர்ம முறையில் ஹோட்டல் அறையில் கிடந்த பெண்ணின் சடலம்... title=

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 26 வயது பெண்ணின் உடல் இறந்தநிலையில் கண்டெடுப்பு...! 

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் பஹர்கான்ஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டளின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 26 வயது பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

அந்த பெண் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் அவருடன் ஒருவர் இறந்துள்ளனதாகவும் காவல்துறையனர் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், சுமார் 3.30 மணியளவில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் அறை கதவைத் திறந்து பார்த்தபோது அந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த ஊழியர் உள்ளே சென்று பார்க்கையில் அந்த பெண் சடலமாக படுக்கையில் கிடந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து, அந்த ஊழியர் மூத்த ஹோட்டல் ஊழியருடன் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, போலீசார் விசாரணையின் போது அந்த பெண் ஒருவருடன் சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னதாக ஹோட்டலுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அணுகினோம், அவர்களை கேள்விக்கு உட்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் அறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பரிசோத்தித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

Trending News