மெட்ரோ நிலையத்தில் 'தேசத் துரோகிகளை சுடுங்கள்' என்று கோஷம் எழுப்பியவர்கள் கைது!

டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் "தேசத் துரோகிகளை சுடுங்கள்" என்று கோஷம் எழுப்பிய 6 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். 

Last Updated : Feb 29, 2020, 05:52 PM IST
மெட்ரோ நிலையத்தில் 'தேசத் துரோகிகளை சுடுங்கள்' என்று கோஷம் எழுப்பியவர்கள் கைது! title=

டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் "தேசத் துரோகிகளை சுடுங்கள்" என்று கோஷம் எழுப்பிய 6 பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். 

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறை காரணமாக 42 பேர் வரை பலியாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாகத்தான் இந்த வன்முறை தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் "தேசத் துரோகிகளை சுடுங்கள்" என்று சிலர் கோஷம் எழுப்பியுள்ளனர். அவர்கள் கோஷம் எழுப்பியதை ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். அந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிப்ரவரி 29, காலை 10.25 மணியளவில் 6 இளைஞர்கள் கோஷம் எழுப்பியது கண்டறியப்பட்டது. சிஐஎஸ்எஃப் அலுவலர்களால் அவர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக டெல்லி மெட்ரோ ரயில் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் சிஏஏ-வுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியதாகக் தெரிவிக்கப்பட்டது. தற்போது இவ்வாறு கோஷம் எழுப்பிய  6 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Trending News