சாலையில் பெண்னை கிண்டல் செய்தவர்களுக்கு 6 மாதம் சிறை!

Last Updated : Sep 25, 2017, 03:44 PM IST
சாலையில் பெண்னை கிண்டல் செய்தவர்களுக்கு 6 மாதம் சிறை! title=

மகாராஷ்டிரவில் இளம்பெண் ஒருவரை தகாத வார்தைகளால் கிண்டல் செய்த இரு வாலிபர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்பு பயின்று வரும் மானவி ஒருவர் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்புகையில் அவரை வழிமறித்து "ஹாய், செக்ஸி! ஹலோ, செக்ஸி!" எனும் தகாத வார்த்தைகளால் வாலிபர்கள் இருவர் கிண்டல் செய்துள்ளனர். 

இதானால் மனமுடைந்த அந்த பெண் இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவ்வாலிபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த வாலிபர்கள் அவானிஷ் பவேகர் (24) மற்றும் ரவி பவேகர் (22) என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இரவரும் இபிகோ பிரிவு 34-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு  1000 ரூபாய் அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

Trending News