Video: தண்டவாளத்தில் சென்ற முதியவர்... டக்கென அருகில் வந்த ரயில் - அப்புறம் நடந்ததை பாருங்க

Kerala Kannur Viral Video: கேரளாவில் அதிவேகமாக ரயில் சென்றுகொண்டிருக்க தண்டவாளத்தின் நடுவே ஒரு நபர் படுத்திருக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் அச்சம்பவத்தை விவரித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 24, 2024, 03:33 PM IST
  • கடந்த ஞாயிறு மாலை அந்த சம்பவம் நடந்துள்ளது.
  • அச்சம்பவத்தின் போது அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது.
  • இந்நிலையில், அந்த நபர் யார் என்று தற்போது தெரியவந்தது.
Video: தண்டவாளத்தில் சென்ற முதியவர்... டக்கென அருகில் வந்த ரயில் - அப்புறம் நடந்ததை பாருங்க

Kerala Kannur Viral Video Latest News: பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

வைரலாகும் கேரள வீடியோ

அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம். 

மேலும் படிக்க | Year Ender 2024: இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது? ஸ்விக்கியின் சுவாரஸ்ய தகவல்கள்!

வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்

ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்வாய்ப்பாக அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த நபர் குடிபோதையில் அப்படி செய்தாரா அல்லது உயிர் தப்பிக்க அப்படி செய்தாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குடிபோதையில் இருந்தாரா...? நடந்தது என்ன?

அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர்தான் அந்த வீடியோவில் இருப்பவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள ஊடகம் ஒன்று பவித்ரனிடம் நேர்காணல் செய்தது. 

அதில் அவர் கூறியதாவது,"நான் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் வருவது எனக்கு தெரியாது. முன்னால் சென்றபோது ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரெயில் கிளம்பியதும் நான் எழுந்து வந்தேன்" என தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான பஸ்ஸில் கிளீனராக இருக்கும் பவித்ரன், அந்த சம்பவத்தின் போது தான் குடிபோதையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரலாம்? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News