சுமார் ரூ.1 லட்சம் கோடி சேதத்தை ஏற்படுத்திய ஆம்பன் சூறாவளி...

ஆறு மணிநேர ஆம்பன் சூறாவளியில் தீவிரத்தால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மற்றும் பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : May 21, 2020, 11:54 AM IST
சுமார் ரூ.1 லட்சம் கோடி சேதத்தை ஏற்படுத்திய ஆம்பன் சூறாவளி... title=

ஆறு மணிநேர ஆம்பன் சூறாவளியில் தீவிரத்தால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மற்றும் பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியதாலும், பலத்த மழை பேரழிவின் பாதையை விட்டு வெளியேறியதாலும் வங்காளத்தில் குறைந்தது 12 பேர் இறந்திருப்பதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட காட்சிகள் வெள்ளத்தில் மூழ்கிய டார்மாக், ஓடுபாதைகள் மற்றும் ஹேங்கர்களைக் காட்டின. குறிப்பாக ஒரு பகுதியில், கூரை வீழ்ந்து கிடப்பதை நாம் பார்க்கலாம்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட நாடு பூட்டப்பட்ட நிலையில் மார்ச் 25 முதல் பயணிகள் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு மற்றும் வெளியேற்றும் விமானங்கள் மட்டுமே இப்போது இயங்குகின்றன. இந்நிலையில் சூராவளியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக விமான நிலையத்தில் அனைத்து நடவடிக்கைகளும் இன்று அதிகாலை 5 மணி வரை மூடப்பட்டிருந்தன.

புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆம்பன் வங்காளத்தை தாக்கியது. மரங்களை பிடுங்கியது, மின் இணைப்புகளை சேதப்படுத்தியது மற்றும் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் பல கட்டிடங்களை சேமதாக்கியது. "சர்பனாஷ் ஹோய் காலோ (இது ஒரு பேரழிவு)" என்று வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி புலயை வர்ணிக்கின்றார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட ஆம்பனின் தாக்கம் மோசமானது என்றும் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்த சூறாவளி சுமார் ரூ.1 லட்சம் கோடி சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். "பரப்பளவில் பகுதி பேரழிவிற்கு உட்பட்டது, தகவல்தொடர்புகள் சீர்குலைந்துள்ளன" என்றும் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். 

5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்ட போதிலும், புயலின் மூர்க்கத்தன்மையை மாநில அதிகாரிகள் முழுமையாக எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News