பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக லக்னோ சென்ற அத்வானி

Last Updated : May 30, 2017, 09:34 AM IST
பாபர் மசூதி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக லக்னோ சென்ற அத்வானி  title=

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால் லக்னோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வளாகத்தில் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உ.பி., போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001-ம் ஆண்டு விடுவித்தது. இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு உறுதிசெய்தது. 

ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News