பீகார் மாநில எம்எல்ஏ டெல்லி விமான நிலையத்தில் கைது!!

  டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை மறைத்து எடுத்து வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

Last Updated : Feb 22, 2019, 10:26 AM IST
பீகார் மாநில எம்எல்ஏ டெல்லி விமான நிலையத்தில் கைது!! title=

புதுடெல்லி:  டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை மறைத்து எடுத்து வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

 

 

பீகார் மாநிலம், மதேபுரா சர்தார் தொகுதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ சந்திரசேகர். இவர், பாட்னா செல்ல டெல்லி விமான நிலையம் வந்தார், அப்போது அவரது உடமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். 

மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 10 தோட்டாக்களை அவர் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. தோட்டக்களை பறிமுதல் செய்த போலீசார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ சந்திரசேகரை கைது செய்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Trending News