சாலையில் செல்லும் போது திடீரென தீ பிடித்த எரிந்த மாருதி வேன்

சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது திடீரென தீ பிடித்த மாருதி வேன். தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு படை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2019, 06:34 PM IST
சாலையில் செல்லும் போது திடீரென தீ பிடித்த எரிந்த மாருதி வேன் title=

ரத்லம்: மத்திய பிரதேசத்தின் ரத்லம் ஜவ்ராவில் உள்ள பிப்லோடா சாலையில் ஒரு மாருதி வேன் திடீரென தீ பிடுத்து எரியத் தொடங்கியது. திடீரென பிடித்த தீயினால் மாருதி வேன் முழுவதும் சில நிமிடங்களில் எரிந்தது. தக தக வென தீ எரிந்தால், யாரும் அருகில் செல்ல முடியவில்லை. தீ ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று இன்னும் தகவல் தெரிவிக்கப்பட வில்லை.

உண்மையில், இந்த சம்பவம், ரத்லம் ஜோலியில் ஜாவ்ராவுக்கு அருகிலுள்ள பிப்லோடா மார்க்கில் நடந்துள்ளது. இந்த வேனை பழுதுபார்ப்பதற்காக விடப்பட்டிருந்தது. அந்த வேனை சரிபார்த்த மெக்கானிக் ஒருவர், வேனை சரியாக செல்கிறதா என்று சோதனை செய்ய ஓட்டிச்சென்று உள்ளார். வேகமாக சென்ற வேன் திடீரென தீ பிடித்தது.

வேனில் தீ பிடித்ததால் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு, உடனடியாக சரியான நேரத்தில் மெக்கானிக் வேனில் இருந்து வெளியேறினார். இதனால் மெக்கானிக்க்கு எந்தவித பாதிப்பும்  ஏற்படவில்லை. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு படை சம்பவ இடத்தை அடைந்து தீயை கட்டுப்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம் ஆகும்.

Trending News