சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: நொய்டா மாணவி முதலிடம்!

Last Updated : May 28, 2017, 12:35 PM IST
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: நொய்டா மாணவி முதலிடம்! title=

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நொய்டாவைச் சேர்ந்த மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

முதலிடம் பிடித்த மாணவியின் பெயர் ரக்‌ஷா கோபால், நொய்டாவில் உள்ள அமிட்டி சர்வதேச பள்ளியில் படித்தவர். 

ரக்‌ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

 

2-ம் இடத்தை 99.4% மதிப்பெண்களுடன் சண்டிகரில் உள்ள டி.ஏ.வி பள்ளி மாணவி பூமி சாவண்ட் பிடித்துள்ளார்.

3-ம் இடத்தை 99.2% மதிப்பெண்களுடன் சண்டிகரிலுள்ள பவன் வித்யாலயா பள்ளியில் படித்த மன்னட் லத்ரா பிடித்துள்ளார்.

மொத்தமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 82% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 83.05 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News