கேரளா வெள்ளம் காரணமாக தெற்குரயில்வே ரயில்கள் நேரம் மாற்றம்!

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2018, 12:11 PM IST
கேரளா வெள்ளம் காரணமாக தெற்குரயில்வே ரயில்கள் நேரம் மாற்றம்! title=

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!

இந்த அறிவிப்பின் படி...

  • கடந்த 14.08.2018 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 12626: டெல்லி - திருவணந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ, ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 15.08.2018 அன்று ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 17230: ஐதராபாத் - திருவணந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ்.. ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று 16.08.2018 கன்யாகுமாரியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்லும் வண்டி எண் 16525: கன்யாகுமாரி - பெங்களூரு செல்லும் ஐலேன்ட் எக்ஸ்பிரஸ, ஈரோடு, தின்டுக்கல், திருநெல்வேலி, கரூர். சேலம், வழி மார்கமாக மாற்றியனுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்., 

  • வண்டி எண்: 16603 மங்களூரு - திருவனந்தபுரம் மாவேலி எக்ஸ்பிரஸ் 
  • வண்டி எண்: 16630 மங்களூரு - திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் 
  • வண்டி எண்: 12081 கன்னூர் - திருவனந்தபுரம் சப்தபடி எக்ஸ்பிரஸ்., ஆகிய வண்டிகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Trending News