செம்மரம் கடத்திய சீன வியாபாரி கைது

திருப்தி அருகில் 1.½ டன் எடையுள்ள 46 செம்மரக்கட்டைகளை வைத்திருந்த சீன வியாபாரி கைது.

Last Updated : Nov 19, 2017, 06:30 PM IST
செம்மரம் கடத்திய சீன வியாபாரி கைது title=

 திருப்பதி அருகில் நேற்று செம்மரம் கடத்திய ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் படி, இன்று ஏர்பேடு வனப்பகுதியில் போலீசார் தனது தேடுதல் வேட்டைத் தொடங்கினர்.

அவ்வனப்பகுதியில், சென்னையை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் சீனாவைச் சேர்ந்த லீன் சிம்மடே ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 1½ டன் எடையுள்ள 46 செம்மரக்கட்டைகளை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

 

Trending News