CAA போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எங்கே? கிஷோர் கேள்வி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸார் பங்கு குறைவாக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்...

Last Updated : Dec 21, 2019, 04:06 PM IST
CAA போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எங்கே? கிஷோர் கேள்வி! title=

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸார் பங்கு குறைவாக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்...

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் ஜனதா தளம் (யுனைடெட்) துணைத் தலைவரும், தேர்தல் மூலோபாயவாதியுமான பிரசாந்த் கிஷோர் சனியன்று, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் இந்த போராட்டங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பங்கேற்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அவ்வாறு இல்லையெனில் இது தொடர்பாக சோனியா காந்தி வெளியிட்ட வீடியோவிற்கு அர்த்தம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பான முன்னேற்றத்தில் அவர்., "குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), NRC-க்கு எதிரான உள்நாட்டுப் போரில் காங்கிரசும் கட்சியும் அதன் உயர் மட்ட தலைவர்களும் சாலையில் காணவில்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை இரவு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC விவகாரத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவை மேற்கொள் காட்டியுள்ள கிஷோர், "குறைந்த பட்சம் நீங்கள் காங்கிரஸ் முதலமைச்சர்கள் அனைவரையும் தங்கள் மாநிலத்தில் NRC செயல்படுத்தப்பட மாட்டோம் என்று அறிவிக்கக் கேட்கலாம். இல்லையெனில் இதுபோன்ற சொல்லாட்சிக்கு அர்த்தமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரியங்கா காந்தி தனது சகோதரரும் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான ராகுல் காந்தி முன்னிலையில் டெல்லி வீதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கத் தோன்றினார், ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் 14-ஆம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியின் பின்னர் போராட்டங்களில் பாரக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News