அகிலேஷ் யாதவுக்கு "சைக்கிள்" சின்னம் - தேர்தல் ஆணையம்

Last Updated : Jan 16, 2017, 06:55 PM IST
அகிலேஷ் யாதவுக்கு "சைக்கிள்" சின்னம் - தேர்தல் ஆணையம் title=

தேர்தல் ஆணையம் சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு "சைக்கிள்" சின்னத்தை ஒதுக்கியது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டாக பிளந்துள்ளது. இதனையடுத்து கட்சியின் சின்னத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி பெரிய அளவில் நடைபெற்று வந்தது. சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் இடையே கட்சியின் தேர்தல் சின்னமாக 'சைக்கிள்' தக்கவைத்து கொள்ள தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

ஆனால் இன்று தேர்தல் ஆணையம் சமாஜ்வாடி கட்சியின் சின்னமான "சைக்கிள்" சின்னத்தை உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கியது.

முன்னர் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:- அம்மாநில முதல்வராக இருக்கும் தன் மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தானும் போட்டியிடப் போவதா முலாயம் சிங் யாதவ் கட்சித் தொண்டர்களிடம் கூறியுள்ளார். மேலும் தான் அகிலேஷ் யாதவிடம் பல முறை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டாலும் அதனை உணர அவர் மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் முலாயம் சிங். 

கட்சியின் முக்கிய தலைவர்களை அகிலேஷ் மிகவும் புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அகிலேஷ் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சமாஜ்வாடி கட்சியை மாற்றி வருகிறார் என்றும், கட்சியை காப்பாற்ற தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் முலாயம் கூறியுள்ளார். எந்த விதமான பிரிவினைவாதமும் சமாஜ்வாடி கட்சி அழிக்க அனுமதிக்க மாட்டேன். எனது பேச்சுக்கு மதிப்பளிக்க அகிலேஷ் தவறிவிட்டால் அவருடன் மோதுவதை தவிர வேறு வழியில்லை எனவும் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். 

Trending News