டெல்லியில் பயங்கரம் பெண்ணுக்கு 22 முறை கத்திக்குத்து

Last Updated : Sep 20, 2016, 04:17 PM IST
டெல்லியில் பயங்கரம் பெண்ணுக்கு 22 முறை கத்திக்குத்து title=

டில்லி நடுரோட்டில், இளம்பெண் ஒருவர் கத்தியால் 2௦ முறை குத்தி கொல்லப்பட்டார். அப்போது அந்த வழியாக சென்ற யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.ஆனால் அந்த நபரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை வெறி கொண்டு குத்திக் கொன்றுள்ளான். 22 முறை அந்தப் பெண்ணை அந்த நபர் வெறித்தனமாக குத்தியுள்ளான். 

டில்லியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கருணா (வயது 21). இவர் வடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர். நடந்து சென்று கொண்டிருந்த கருணாவை இன்று காலை அந்த நபர் அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளான். ஒரு சமயத்தில் திடிரென கருணாவை கத்தியால் சராமரியாக தாக்க துவங்கினான். இதைப் பார்த்த மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பிறகு சுரேந்தர் சிங்(வயது 34) போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவர் கருணாவிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில், கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட கருணா பரிதாபமாக உயிரிழந்தது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த சிலர் கண்டும் காணாததும் போல் நடந்து சென்றதும், சிலர் பயந்து கொண்டு தயங்கி நிற்பதும் பதிவாகியுள்ளது. சுரேந்தரை பார்த்ததும் கருணா நகர்ந்து செல்ல முயன்றதும், பின்னர் சுரேந்தர், கருணாவை கத்தியால் கடுமையாக குத்தி பின்னர் கல்லை கொண்டு தலையில் தாக்கியதும் பதிவாகியுள்ளது.

Trending News