2 மாதங்களுக்குப் பிறகு கடவுளை பார்த்த பக்தர்கள்... சில புகைப்படங்கள்

அன்லாக் 1.0 இன் கீழ் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நாட்டின் அனைத்து ஆலயங்களும் ஜூன் 8 முதல் அதாவது இன்று முதல் (திங்கள்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2020, 12:32 PM IST
2 மாதங்களுக்குப் பிறகு கடவுளை பார்த்த பக்தர்கள்... சில புகைப்படங்கள் title=

புது டெல்லி: அன்லாக் 1.0 (Unlock-1) இன் கீழ் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நாட்டின் அனைத்து ஆலயங்களும் ஜூன் 8 முதல் அதாவது இன்று முதல் (திங்கள்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. பல பெரிய கோயில்கள் இன்னும் மூடப்பட்டிருந்தாலும், இன்று திறக்கப்பட்ட கோயில்களில் சமூக தொலைவு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனித்த பின்னரே மக்கள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் செய்தி படிக்க | ஊரடங்கில் சம்பாதியம் இல்லை, தனது தாயுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!

உ.பி-யில் அயோத்தி ராமர் கோயில் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தேவஸ்தளங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், முதல்வர் யோகி தானே கோரக்பூரில் உள்ள தனது கோரக்நாத் கோவிலுக்கு சென்றுள்ளார்.

மே 30 ஆம் தேதி அன்று, ஜூன் 8 முதல் நாட்டில் அன்லாக்-1.0 தொடங்கப்படும் என்றும், கொரோனா வைரஸ் (Corona Lockdown) ஊரடங்கில் பெருமளவு தளர்த்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

சமூக தொலைதூரத்தைப் பின்பற்றுவது, முகமூடி (Mask) அணிவது, ஆரோக்யா சேது (Arogya setu) பயன்பாடு போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. 

மேலும் செய்தி படிக்க | லாக்-டவுன் 5, அன்லாக்-1: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு இல்லை -முழு விவரங்கள்

கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் சமூக தொலைதூர வட்டங்களை (Social Distancing) வரைந்துள்ளன. அங்கு பக்தர்கள் வரிசையில் நின்று தங்கள் முறைக்கு காத்திருக்க வேண்டும். பாதிரியார்கள் உட்பட அனைவருக்கும் முகமூடிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் சானிடிசர்கள், மற்றும் வெப்ப திரையிடல் கருவி போன்ற ஏற்பாடு செய்துள்ளனர்.

கடவுளை தரித்த பக்தர்கள் - சில புகைப்படங்கள்:

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News