லாக்-டவுன் 5, அன்லாக்-1: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு இல்லை -முழு விவரங்கள்

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்களில் எதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எவை தடை செய்யப்பட்டு உள்ளன என்பதை குறித்து காண்போம். 

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2020, 01:47 PM IST
லாக்-டவுன் 5, அன்லாக்-1: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு இல்லை -முழு விவரங்கள் title=

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஜூன் 30 வரை லாக்-டவுன் அமலில் இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளை விட, மற்ற பகுதிகளில் முன்பைவிட அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்தது. அதில் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, மற்ற பணியிடத்தில் அதிக ஊழியர்களை அனுமதிப்பது மற்றும் ஷோரூம்கள் மற்றும் நகைக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது உட்பட பல அறிவிப்புக்களை அறிவித்தது.

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்களில் எதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எவை தடை செய்யப்பட்டு உள்ளன என்பதை குறித்து காண்போம். மேலும் கட்டுப்பாட்டு பகுதியை (Containment Zones) தவிர மற்ற பகுதிகளில் இந்த அறிவிப்பு பொருந்தும்.

> தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zone) எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு உத்த்ரவு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

> காய்கறி, மளிகை சாமான்கள் போன்ற அத்தியவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும்.

> டீ கடைகள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி. தேநீர் கடைகளில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறது.

> டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.

> மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 

> உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. 

> உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

> தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களின் தரப்பில் இயக்கப்படும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

> அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

> தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

> வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். 

> ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

> ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம்.

> முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

> அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வீட்டு விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

> குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது.

Trending News