மகாராஷ்டிரா அணுசக்தி மையம் அருகே தீ விபத்து: 5 பேர் காயம்!

மகாராஷ்டிராவில் அணுசக்தி மையம் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயம்!

Last Updated : Mar 9, 2018, 08:16 AM IST
மகாராஷ்டிரா அணுசக்தி மையம் அருகே தீ விபத்து: 5 பேர் காயம்! title=

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் தாராப்பூர் அணுசக்தி மையம் இயங்கி வருகிறது. இதன் அருகில் செயல்பட்டு வருவது பொய்சர் - தாராப்பூர் தொழிற்பேட்டை. இந்த தொழிற்பேட்டையில் கெமிக்கல் கம்பெனி உள்பட பல்வேறு கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அங்குள்ள கெமிக்கல் கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. கம்பெனியில் பரவிய தீ அருகிலுள்ள மற்ற கம்பெனிகளுக்கும் பரவியது.தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயை அணைக்க போராடின.

இந்த தீ விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News