மாணவர் சமையல் பாத்திரம் கழுவிய சர்ச்சைக்கு உதவி ஆணையாளர் விளக்கம்!

பள்ளியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாணவரை சமையல் பாத்திரம் கழுவச் செய்த நிகழ்வு நடந்திருக்கும் என கொரிய மாவட்ட உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்!  

Last Updated : Aug 2, 2018, 04:13 PM IST
மாணவர் சமையல் பாத்திரம் கழுவிய சர்ச்சைக்கு உதவி ஆணையாளர் விளக்கம்!  title=

பள்ளியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாணவரை சமையல் பாத்திரம் கழுவச் செய்த நிகழ்வு நடந்திருக்கும் என கொரிய மாவட்ட உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்!  

சமீபத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பண்டிட் பகுதியில் உள்ள கன்யா ஆஷ்ரம் (பழங்குடி பெண்களுக்கான குடியிருப்பு பள்ளி) பள்ளி மாணவரை சமையல் பாத்திரம் கழுவச் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக ANI தகவலின் படி, கொரிய மாவட்ட உதவி ஆணையாளர் கூறுகையில், பள்ளியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், அத்தகைய ஒரு சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். மேலும், இதுபோன்ற பணிகளை செய்ய சொல்லி மாணவர்களை கேர்க்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

 

Trending News