கார்கில் நாயகன் வாஜ்பாயை இழந்த துக்கத்தில் இந்தியா....

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 08:50 AM IST
கார்கில் நாயகன் வாஜ்பாயை இழந்த துக்கத்தில் இந்தியா.... title=

பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி...

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தநிலையில், நேற்று மாலை 5.57 மணியளவில் சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதையடுத்து, டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்..

இதை தொடர்ந்து, பொதுமக்களும் நேற்றிரவு மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு அவரது புகைப்படத்துடன் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.    

 

Trending News