பயங்கரவாதிகளிடம் இது போன்ற ஆபத்தான ஆயுதம்; இந்திய இராணுவம் பதற்றம்

தடை செய்யப்பட்ட எஃகு தோட்டாக்கள் சீனாவால் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு சப்ளை செய்யப்படுகிறது. அவர்களிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கு செல்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2020, 03:18 PM IST
பயங்கரவாதிகளிடம் இது போன்ற ஆபத்தான ஆயுதம்; இந்திய இராணுவம் பதற்றம் title=

ஸ்ரீநகர்: புல்வாமா, ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் காவலரைத் தாக்கிய ஆதில் தாரின் உறவு சகோதரர் சமீர் தார் வெளிப்படுத்திய சம்பவம் பாதுகாப்புப் படையினரின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சமீர் தார் கூறுகையில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளிடம் அதுமாதிரி தோட்டாக்கள் உள்ளது, எப்படி என்றால் எஃகு கலவையால் செய்யப்பட்ட  அந்த தோட்டாக்கள், கவச வாகனங்கள் மற்றும் பதுங்கு குழிகளை எளிதில் அழிக்கக்கூடியது என்று கூறியுள்ளான். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த மாதிரி தோட்டாக்கள் உலகளாவிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் இந்த தோட்டாக்களை நமது அண்டை  நாடான சீனா தான் தயாரித்து, நமது பரம எதிரியான பயங்கரவாதிகளுக்கு வழங்குகிறது. மறுபுறம், இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த இந்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர்ப்பதற்காக எஃகு கவச வாகனங்கள் மற்றும் பதுங்கு குழிகளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்புப் படையினருக்கு கவலை அதிகரித்துள்ளது.

சமீர் தார் கைது
2019 டிசம்பரில் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை அனுப்பி வைத்தான். சாதாரண கவச வாகனங்களில் ஊடுருவக்கூடிய திறன் கொண்ட எஃகு தோட்டாக்கள் உட்பட ஏராளமான வெடிமருந்துகள் தீவிரவாதிகளிடம் இருப்பதாக சமீர் கூறினார். புல்வாமா மாவட்டத்தில் காக்போராவைச் சேர்ந்தவர் சமீர். ஜெய்ஷ் பயங்கரவாதிகளால் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர் நக்ரோட்டாவில் இருந்து தப்பிச் சென்றபோது அவர் போலிஸாரால் பிடிக்கப்பட்டார்.

எஃகு புல்லட் என்றால் என்ன? அது ஆபத்தானதா? 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 5 சிஆர்பிஎஃப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஆதாரங்களின்படி, இந்த ஜவான்கள் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். அதன் பிறகும், ஜவான்களை குண்டு துளைத்தது. பாதுகாப்புப் படையினரின் விசாரணையில், பயங்கரவாதிகள் எஃகு தோட்டாக்களைப் பயன்படுத்தினர் என்பது தெரியவந்தது.

பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்த தோட்டாக்களை பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு வழங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எஃகு தோட்டாக்கள் சீனாவால் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து ஐ.எஸ்.ஐ. அமைப்பு சப்ளை செய்யப்படுகிறது. இந்த எஃகு தோட்டாக்கள் கவச வாகனம் மற்றும் பதுங்கு குழிக்குள் ஊடுருவக்கூடிய அளவுக்கு ஆபத்தானவை. இப்போது ஜெய்ஷ்-இ-முகமது இந்த எஃகு தோட்டாக்களைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினரைத் தாக்குகிறார். ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 27 டிசம்பர் 2017 அன்று முதல் முறையாக எஃகு தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

எஃகு தோட்டாக்கள் பயன்படுத்த மிகவும் எளிதானது
எஃகு தோட்டாக்கள் பயன்படுத்த மிகவும் எளிதானது. இதை சாதாரண ஏ.கே .47 தாக்குதல் துப்பாக்கியால் சுடலாம். இரண்டு முதல் மூன்று தோட்டாக்களை ஒரு நேரத்தில் வைக்கலாம். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நூர் முகமது தந்திரே அல்லது பிர் பாபா இந்த எஃகு தோட்டாக்களை பயங்கரவாதிகளுக்கு முதல்முறையாக வழங்கியதாக பாதுகாப்பு படையினர் நம்புகின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் பதற்றம் அதிகரிப்பு; விஐபி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
பயங்கரவாதிகளிடம் எஃகு தோட்டாக்கள் இருப்பதால் பாதுகாப்புப் படையினரின் பதற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. வி.ஐ.பி பாதுகாப்பைக் கவனிக்கும் முகவர்கள் எஃகு புல்லட்டைக் கருத்தில் கொண்டு தங்கள் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக இந்த தோட்டாக்கள் புல்லட் ப்ரூஃப் வாகனங்களையும் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டவை. இந்த தோட்டாக்கள் உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் சீனா அவற்றை கண்மூடித்தனமாக உருவாக்கி வருகிறது, இப்போது இந்த தோட்டாக்கள் காஷ்மீரில் பயமுறுத்த பயன்படுத்தப்படுகின்றன.

காஷ்மீருக்கு எஃகு தோட்டாக்கள் வந்தபோது, ​​பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “எஃகு தோட்டாக்களின் பயன்பாடு தெரியவந்த பின்னர் நாங்கள் விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம்” என்றார். இத்தகைய தோட்டாக்களை சீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹார்ட்கோர் எஃகு மூலம் தயாரிக்கப்படுகின்றன. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் எஃகு தோட்டாக்களை தாங்க கூடியது அல்லை என்று அவர் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News