ஜம்மு-காஷ்மீ காவல் படை மீது தாக்குதல் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்ச சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

Last Updated : Nov 13, 2017, 07:40 PM IST
ஜம்மு-காஷ்மீ காவல் படை மீது தாக்குதல் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை title=

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர் பாதுகாப்பு படையினர். அப்பொழுது பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்ச சூடு நடந்தது. 

இந்த துப்பாக்கிச்ச சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படை சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 

 

Trending News