நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த தகவல் வெளியானது

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மூன்று முறை மட்டுமே நாடாளுமன்றம் கூடியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2021, 08:37 AM IST
  • ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்.
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
  • ஜூலை மாதம் 19ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த தகவல் வெளியானது title=

நாட்டில் கொரோனா தொற்று பரவல் (Corona Pandemic) தொடங்கிய நாள் முதல் இன்று வரை மூன்று முறை மட்டுமே நாடாளுமன்றம் கூடியுள்ளது. அதிலும், மூன்று முறையும் மிக மிகக் குறைவான நாட்களே கூட்டத்தொடர் நடைபெற்றது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்ற (Parliament) மழைக்கால கூட்டத்தொடர் (Mansoon Session), ஜூலை மாதம்  19ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

இருப்பினும், இந்த மழை கூட்டத்தொடர் கொரோனா (Corona) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுமா என்பது குறித்து  தகவலும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ALSO READ | SC: புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரிய PIL தள்ளுபடி

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரை, இதுவரை மக்களவை (Loksabha) உறுப்பினர்கள்  540 பேரில்  403 பேரும், மாநிலங்களவை (Rajyasabha) உறுப்பினர்கள் 232 பேரில்  179 பேரும் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம்,  உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,  மாநிலங்களில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள கட்சியின் பிரதிநிதிகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Twitter கொள்கையை விட இந்திய சட்டங்கள் மேலானவை : நாடாளுமன்ற நிலைக்குழு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News