நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள NEET - ஒரு பார்வை!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது!

Last Updated : May 6, 2018, 07:30 AM IST
நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள NEET - ஒரு பார்வை! title=

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 

நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது. 

இத்தேர்விற்கு பதிவுசெய்துள்ள தமிழக மாணவர்களில் சுமார் 5000 மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இன்று காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.45 மணி வரை சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் வரும் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டர். NEET தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 5-ஆம் நாள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

NEET தேர்வு கட்டுபாடுகள்!

தேர்வு அறைக்குள் வரும் மாணவர்கள் அவர்களது ஹால் டிக்கெட்டுடன், அதில் ஒட்டப்பட்டு இருப்பதை போன்ற 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை மட்டும் கொண்டு செல்லவேண்டும். பேனா கொண்டு செல்லக்கூடாது. தேர்வு அறையிலேயே பேனா கொடுக்கப்படும். கைக்கெடிகாரம் அணிந்து செல்லக் கூடாது. மாணவர்கள் அரைக்கை சட்டைதான் அணிந்து செல்லவேண்டும். அதில் பொத்தான் பெரிதாக இருக்கக்கூடாது. அதேப்போல் கால்குலேட்டர், செல்போன், கைப்பை, ஹெட்போன், பென்டிரைவ், கேமரா ஆகியவற்றுக்கும் அனுமதி கிடையாது. 

மாணவிகள் சல்வார், பேண்ட் அணிந்து வரவேண்டும். சேலை அணிந்து வர அனுமதி கிடையாது. காதணி, மோதிரம், மூக்குத்தி, சங்கிலி, வளையல் போன்றவை அணிந்திருக்கக்கூடாது. குறைந்த உயரம் கொண்ட செருப்புகளை அணிந்து வரவேண்டும். 

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்க படமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Trending News