ரூ.100க்கு அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை

100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளம் நாட்டின் மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

Last Updated : Jan 21, 2019, 05:53 PM IST
ரூ.100க்கு அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு நேபாளம் அரசு தடை title=

100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளம் நாட்டின் மத்திய வங்கி தடை விதித்துள்ளது.

நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசு 100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க தீர்மானித்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நேபாள ராஷ்டிர வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் 200, 500, 2000 ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

Trending News