2 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாட்டில் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

Last Updated : Oct 27, 2018, 03:01 PM IST
2 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி! title=

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாட்டில் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாடு நாளை டோக்கியோவில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று ஜப்பான் புறப்பட்டு சென்றார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசுகிறார்.  

ஜப்பான் புறப்படும் முன்பு பிரதமர் மோடி அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், இந்தியாவும், ஜப்பானும் ஒரு வெற்றி கூட்டணி. ஜப்பான் இந்தியாவின் உண்மையான நட்புநாடு. அது பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறையில் நவீனமயமாகி உள்ளது.

என குறிப்பிட்டுள்ளார்.

Trending News