பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 15, 2020, 10:41 AM IST
பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து title=

அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பொங்கல் திருநாள் வாழத்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறி வருகின்றனர். வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றது அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News