PNB Case: காணாமல் போன மெகுல் கோக்ஸி டொமினிகாவில் பிடிப்பட்டார்

2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2021, 08:34 AM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், முக்கிய குற்றவாளியான மெகுல் சோக்ஸி, இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.
  • டொமினிகா ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு அருகில் உள்ளது.
  • மெகுல் சோக்ஸி விரைவில் ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
PNB Case: காணாமல் போன மெகுல் கோக்ஸி டொமினிகாவில் பிடிப்பட்டார் title=

நாட்டை உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில், முக்கிய குற்றவாளியான மெகுல் சோக்ஸி (Mehul Choksi), இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.  2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.

இந்நிலையில், நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர், மெகுல் சோக்ஸியை காணவில்லை என தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக, விசாரணையை மேற்கொண்ட ஆன்டிகுவா போலீஸார் ‘இண்டர்போல் மஞ்சள் நோட்டிஸ்” பிறப்பித்தனர். அதை அடுத்து மெஹுல் சோக்ஸி  டொமினிகா போலீஸாரிடம் பிடிப்பட்டார். 

டொமினிகா அதிகாரிகள் தங்கள் நாட்டில் காவலில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். WION  தொலைகாட்சியுடன் பேசிய சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால், " மெகுல் சோக்ஸி இருக்கும் இடம் தெரிந்ததில், அவரது குடும்பத்தினர், நிம்மதியாக உள்ளனர். மேலும் டொமினிகாவுக்கு அவர் எவ்வாறு சென்றார் அல்லது கொண்டு செல்லப்பட்டார் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் அவருடன் பேச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார்

டொமினிகா ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு அருகில் உள்ளது. அவர் விரைவில் ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயன்று WION தொலைபேசியுடன் பேசிய, ஆன்டிகுவா மற்றும் பார்புடா காஸ்டன் பிரவுன் பிரதமர், 'நான் இதை இந்திய மக்களுக்கும், உலகுக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருப்பதை வரவேற்கவில்லை. நாங்கள் அவர் இங்கிருந்து விரைவில் எங்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்றே விருப்புகின்றோம் " என்றார்.

ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், மற்றொரு முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியை (Nirav Modi), விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வர  இந்தியாவின் முயற்சி தொடர்பான, முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று நிரவ் மோடியை, விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு திருப்பி அழைத்து வர, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நிரவ் மோடி (Nirav Modi), அங்கிருந்து இந்தியா திரும்பிவில்லை. கடந்த மார்ச் மாதம்  லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர். 

ALSO READ  | PNB case: நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News