உத்ரகாண்ட் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 4.7 ஆக பதிவு!

நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.!

Last Updated : Dec 28, 2017, 06:59 PM IST
உத்ரகாண்ட் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 4.7 ஆக பதிவு! title=

உத்ரகாண்டின் ருத்ரப்ரியாக் பகுதியில் சக்தி வாய்ந்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

இதைனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் சிறிதளவு நடுக்கம் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு ஓடி வந்தனர்.  

இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News